சுருளி ராஜன் (ஆங்கிலம்: Suruli Rajan) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். இவருக்கு 1981-82 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை
நடிகர் சுருளி ராஜன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1938ம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் சங்கரலிங்கம் ஆகும். சுருளி அருவியருகே இருந்த இவரது குலதெய்வம் சுருளிவேலர் சுவாமி பெயர் இவருக்கு இடப்பட்டது.
இவரின் தந்தையார் பெயர் பொன்னையாப்பிள்ளை. இவர் அவ்வூரில் உள்ள விவசாயப் பண்ணையில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்தார். இவரின் தந்தையாரின் இறப்பிற்குப்பின் மதுரையில் தனது சகோதரர் வீட்டில் இருந்து சிறு தொழிற்சாலையில் வேலை கற்றுக்கொண்டு இருந்தார்.
நடிப்பு
மதுரையில் வேலைபார்த்துக்கொண்டே தன்னார்வ நாடகங்களில் நடித்தார். ஆகையால் 1959ம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தார். முதலில் கலைஞரின் காகிதப்பூ என்ற நாடகத்தில் தேர்தல் நிதிக்காக நடித்தார்.
பின்னர் தயாரிப்பாளர் ஜோசப்பின் சிட்டாடல் திரைப்படக்கழகத்தால் எடுக்கப்பட்ட “இரவும் பகலும்” (1965) என்ற திரைப்படத்தில் நடித்தார், அப்போதே “காதல் படுத்தும்பாடு” என்ற படத்திலும் நடித்தார். 1970ல் திருமலை தென்குமரி, 1971ல் “ஆதிபராசக்தி” என்ற படத்தில் சென்னை மீனவர் பேச்சுப்பேசி அனைவரையும் தன் பக்கம் திருப்பினார்.
1970ம் ஆண்டுகளில் புகழின் உச்சத்தில் இருந்தார். ம. எ. காஜா வின் “மாந்தோப்புக்கிளியே” என்ற படத்தின் மூலம் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரானார்.
ஒளி பிறந்தது, மனிதரில் இத்தனை நிறங்களா, முரட்டுக்காளை, ஹிட்லர் உமாநாத், பாலாபிசேகம், ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், பொல்லாதவன், நான் போட்ட சவால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
விருது
இவருக்கு 1981-82ம் ஆண்டுக்கான சிறந்த சிரிப்பு நடிகர் பட்டத்தை தமிழக அரசு வழங்கி சிறப்பித்தது.
மரணம்
சிரிப்பு நடிகர் சுருளி ராஜன் தனது புகழின் உச்சியில் இருந்த 1980ம் ஆண்டு 42 வயதில் மரணமடைந்தார்.
நடித்த திரைப்படங்கள்
1976 | அக்கா |
---|---|
பத்ரகாளி | |
இன்ஸ்பெக்டர் மனைவி | |
ஜானகி சபதம் | |
குமார விஜயம் | |
மதன மாளிகை | |
மேயர் மீனாட்சி | |
மிட்டாய் மம்மி | |
நீ இன்றி நானில்லை | |
ஒரே தந்தை | |
துணிவே துணை | |
உங்களில் ஒருத்தி | |
உறவாடும் நெஞ்சம் | |
வாழ்வு என் பக்கம் | |
1977 | ஆறு புஷ்பங்கள் |
ஆட்டுக்கார அலமேலு | |
அண்ணன் ஒரு கோயில் | |
தீபம் | |
துர்க்கா தேவி | |
கேஸ்லைட் மங்கம்மா | |
இளைய தலைமுறை | |
மதுர கீதம் | |
முன்னொரு நாள் | |
நீ வாழ வேண்டும் | |
ஓடி விளையாடு தாத்தா | |
ஒளிமயமான எதிர்காலம் | |
ஒருவனுக்கு ஒருத்தி | |
பாலாபிஷேகம் | |
பெருமைக்குரியவள் | |
ராசி நல்ல ராசி | |
சொன்னதை செய்வேன் | |
சொந்தமடி நீ எனக்கு | |
தூண்டில் மீன் | |
1978 | ஆயிரம் ஜென்மங்கள் |
அக்னி பிரவேசம் | |
அண்ண இலட்சுமி | |
அதைவிட இரகசியம் | |
அவள் தந்த உறவு | |
பைரவி | |
சிட்டுக்குருவி | |
என் கேள்விக்கு என்ன பதில் | |
இவள் ஒரு சீதை | |
கண்ணாமூச்சி | |
கண்ணன் ஒரு கைக்குழந்தை | |
கராத்தே கமலா | |
மச்சானைப் பாத்தீங்களா | |
மக்கள் குரல் | |
மனிதரில் இத்தனை நிறங்களா | |
மீனாட்சி குங்குமம் | |
மேள தாளங்கள் | |
ஒரு வீடு ஒரு உலகம் | |
பஞ்சாமிர்தம் | |
பாவத்தின் சம்பளம் | |
ராஜாவுக்கு ஏத்த ராணி | |
ருத்ர தாண்டவம் | |
சக்கைப்போடு போடு ராஜா | |
சங்கர் சலீம் சீமான் | |
சொன்னது நீ தானா | |
டாக்ஸி டிரைவர் | |
தாய் மீது சத்தியம் | |
திருக்கல்யாணம் | |
திரிபுர சுந்தரி | |
உனக்கும் வாழ்வு வரும் |