திருப்புரம்பியம் போர்
பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் திருப்புரம்பியம் போரில் ஆதித்த சோழனிடம் தோற்றதைத் தொடர்ந்து பாண்டிய நாட்டில் தொடர்ந்து உள்நாட்டு குழப்பங்கள் ஏற்படலாயின. இதைத் தொடர்ந்து கி.பி. 880ம் ஆண்டு பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் ஆட்சியை அவன் தம்பி பராந்தகப் பாண்டியன் கைப்பற்றிக் கொண்டான். மேலும் இரண்டாம் வரகுண பாண்டியன் துறவறம் பூண்டான்.
பதவியேற்பு
பாண்டிய மன்னனாக கி.பி. 880ம் ஆண்டு பராந்தகப் பாண்டியன் பதவியேற்றான். இவன் பாண்டிய மன்னன் சீமாறன் சீவல்லபனின் இரண்டாம் மகன் ஆவான். மேலும் இவன் சடையவர்மன் எனும் படப்பெயராலும் வீர நாராயணன் என்ற சிறப்புப் பெயராலும் அழைக்கப்பட்டான்.
வானவன் மாதேவி
பராந்தகப் பாண்டியன் சேர மன்னனின் மகள் வானவன் மாதேவியை மணந்து கொண்டான். திருநெல்வேலி மாவட்டத்தில் சேரமாதேவி என்ற நகர் ஒன்று இவள் பேரில் அமைக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் பிறந்தவனே பின்னர் பாண்டிய நாட்டினை ஆண்ட மன்னன் மூன்றாம் இராசசிம்மன் ஆவான்.
பராந்தகப் பாண்டியன் ஆற்றிய போர்கள்
கரகிரியில் நடை பெற்ற போரில் உக்கிரனைப் போரில் வென்று பெண்ணாகட நகரை அழித்தான். கொங்கர்களைப் போரில் வென்று வாகை சூடினான்.உக்கிரகிரியில் பெரிய கோட்டை ஒன்றினைக் கட்டியவன்.
தளவாய்புரச் செப்பேடுகள்
கி.பி. 900 ஆம் ஆண்டளவில் இறந்தான். இவனது வெற்றிகளையும், அறச் செயல்களையும் தளவாய்புரச் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகின்றது
Comments