பார்வதி திருவோத்து (பிறப்பு: ஏப்ரல் 7, 1988) என்றும் பார்வதி என்றும் அறியப்படும் இந்திய நடிகை கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தார். இவர் மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் 2006ல் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பின்பு 2008 ஆம் ஆண்டு வெளியான பூ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், மற்றும் மரியான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். பூ திரைப்படத்திற்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார். அத்தோடு விஜய் டிவியின் புதுமுக நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.
வெளி இணைப்புகள்
நடிகை பார்வதி திருவோத்து – விக்கிப்பீடியா