கபீர் பேடி (Kabir Bedi 16 ஜனவரி, 1946) சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்ற இந்தியத் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இந்தியா, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்தார். தாஜ் மஹால்: ஆன் எடெர்னல் லவ் ஸ்டோரியில் பேரரசர் ஷாஜகானாக இவரது கதாப் பாத்திரத்திற்காக புகழ்பெற்றார். டிவி குறுந்தொடரில் கடற்கொள்ளைக்காரன் சந்தோகனாக இவர் நடித்ததற்காகவும், 1983 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பாண்டு திரைப்படமான ஆக்டோபுஸ்ஸியில் கோவிந்தாவாக இவரது பாத்திரத்திற்காகவும் ஐரோப்பாவில் நன்கு அறியப்பட்டார்.
கபீர் பேடி இந்தியக் குடிமகனாகவே மும்பையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
வாழ்க்கை வரலாறு
ஆரம்பகால வாழ்க்கை
இந்தியாவின் பஞ்சாபி குடும்பத்தில் மூன்று குழந்தைகளில் ஒருவராகக் கபீர் பேடி பிறந்தார். இவர்கள் ஆங்கிலேய குடியேற்ற ஆட்சியில் இருந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடுவதற்காக தங்களை அர்பணித்துக்கொண்டிருந்தனர். இவரது தாயாரான பெரெடா பேடி பின்னர் திபெத்திய புத்த மதத்திற்கு மாறினார். இவரது தந்தை பாபா பியாரே லால் பேடி சீக்கிய நம்பிக்கையுடைய நூலாசிரியர் மற்றும் தத்துவஞானி ஆவார். இவரது இனமானது முதல் சீக்கிய குருவின் மூலத்தில் இருந்து தழைத்தது.
கபீர் பேடி நைனிதலில் உள்ள ஷெர்வுட் கல்லூரியில் இவரது பள்ளிப்படிப்பை முடித்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
மூன்று முறை திருமணம் செய்துகொண்ட பேடிக்கு பூஜா, சித்தார்த் மற்றும் ஆதாம் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் ஒடிசி நடனக்கலைஞரான புரோட்டிமா பேடியைத் திருமணம் செய்தார். இவர்களது மகளான பூஜா பேடி இந்தித் திரைப்படங்களில் நடிகை ஆவார். இப்போது இவர் ஓர் இதழில் பத்திரிகையாளராக உள்ளார். அமெரிக்காவின் பல்கலைக்கழகத்திற்கு கல்வி கற்கச் சென்ற இவர்களது மகன் சித்தார்த் மூளைக் கோளாறால் இவதிப்பட்டார். இவர் 1997 ஆம் ஆண்டில் இவரது 26 வது வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
பர்வீன் பாயியுடன் இவர் நட்புகொள்ளத் தொடங்கியதால் புரோட்டிமாவுடன் இவரது திருமணம் முறிந்தது. இருந்தும் இவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. பின்னர் பிறப்பில் ஆங்கிலேயரான ஆடை வடிவமைப்பாளர் சூசன் ஹம்ப்ரேஸை இவர் திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்களது மகனான ஆதம் பேடி ஒரு சர்வதேச வடிவழகன் ஆவார். இவர் பாலிவுட்டில் அறிமுகமாகி திரில்லர் திரைப்படமான ஹலோ? ஹோ ஹை! திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.
1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், தொலைக்காட்சி மற்றும் வானொலி வழங்குனரான நிக்கி பேடியை இவர் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தமபதியினருக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. இருவரும் 2005 இல் விவாகரத்து செய்துகொண்டனர். அண்மையில் பேடி லண்டனைச் சார்ந்த பெண்ணான பர்வீன் துஸாஞ்சுடன் இணைத்து பேசப்பட்டார்.
கபீர் பேடி பர்மாவில் சுதந்திரத்திற்கு போராடுபவர்களுக்கு ஆதரவாளராக இருந்தார். மேலும் பர்மா கேம்பைன் UKவின் அதிகாரப்பூர்வ அரசுத்தூதராக உள்ளார்.
தொழில் வாழ்க்கை
கபீர் பேடி இந்திய அரங்குகளில் இவரது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் இந்தித் திரைப்படங்களில் நடித்தார். சில ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் ஐரோப்பாவில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேடி பங்கேற்றுள்ளார். அங்கு இவர் பரவலாக பிரபலமடைந்தார்.
மேடை நடிப்பு
கபீர் ஒரு மேடை நடிகராக ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோவில் நடித்தார். மேலும் முட்டாள்தனமான வரலாற்று இந்திய ராஜாவான துக்லக்காகவும் சித்தரிக்கப்பட்டார்; மேலும் த வல்ச்சரஸில் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் ஆல்கஹால் அருந்துபவராகவும் நடித்தார். மேலும் லண்டனில் ஷாஃப்டெஸ்புரி அரங்கில் எம்.எம்.கயேவின் புதின தழுவலான த ஃபார் பெவிலியன்ஸில் நடித்தார்.
திரைப்படத் தொழில் வாழ்க்கை
ஜேம்ஸ் பாண்டு திரைப்படமான ஆக்டோபுஸ்ஸியில் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ரோகர் மூருடன் சண்டையிடும் வில்லனின் கையாளான கோபிந்தாவாக சித்தரிக்கப்பட்டார்.
கபீர் 60 இந்திய பாலிவுட் திரைப்படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். வரலாற்று வீரகாவியமான தாஜ்மஹால்: ஆன் எடர்னல் லக் ஸ்டோரி இல் பேரரசர் ஷாஜகனாக கபீர் நடித்தார். ராஜ் கோஸ்லாவின் கச்சே தாக், ராகேஷ் ரோசனின் கோன் பாரி மாங் மற்றும் பராஹ் கானின் மே ஹூ நா உள்ளிட்ட பிற பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது ஹிரித்திக் ரோசன் (கிட்ஸ்), கோவிந்தா (ஷோமன்) மற்றும் அக்ஷய் குமார் (ப்ளூ) போன்றவர்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் தீபா மேத்தாவின் திரைப்படமான கமகட்டா மருவில் அமிதாப் பச்சன் மற்றும் ஜான் ஆபிரகாமுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கொலம்பியா பிச்சர்ஸின்’ த பீஸ்ட் ஆப் வார் என்ற திரைப்படத்தில் திருப்புமுனையுடையப் பாத்திரங்களில் கபீர் நடித்தார். ஆப்கானிஸ்தானில் ரஷ்யப் போரைப் பற்றிய திரைப்படமான இது கெவின் ரெனால்ட்ஸால் இயக்கப்பட்டது. அதே போல் கெளரவமிக்க டேவிட் டி டொனாடெல்லோ விருது வெற்றியாளரான மார்கோ போன்டி இயக்கி பாராட்டுகளைப் பெற்ற இத்தாலியத் திரைப்படம் ஆண்டாட்டா ரிட்டோநோவில் நடித்தார்.
தொலைக்காட்சிப் பணி
அமெரிக்க தொலைக்காட்சி – முக்கியநேரம் மற்றும் பகல்வேளை தொடர் மற்றும் குறுந்தொடரில் கபீர் முக்கியக் பாத்திரங்களில் நடித்தார். ஹால்மார்க்கின் ஆப்பிரிக்க வீரகாவியமான பார்பிடன் டெரிடரி, மற்றும் கென் போலெட்டுடைய ஆன் விங்ஸ் ஆப் ஈகிள்ஸ் மற்றும் ரெட் ஈகிள் ஆகியவை இதில் அடக்கமாகும். இவர் NBCக்கான த லாஸ்ட் எம்பயரில் துறவி மடத்தில் இருப்பவராகவும் நடித்தார். மேலும் டைனஸ்டி, மர்டர், ஷீ ரோட், மக்னம், பீ.ஐ., ஹண்டர், நைட் ரைடர் மற்றும் ஹைலேண்டர்: த சீரிஸ் போன்ற திரைப்படங்கள் பலவற்றுள் கபீர் பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்.
ஐரோப்பாவில் இவர் நடித்த சந்தோகன் பரவலான வெற்றியைப் பெற்றுத் தந்தது. இது ஆங்கிலேய ஆட்சி காலத்தின் போது வாழ்ந்த ஒரு காதல் நிறைந்த ஆசிய கடற்கொள்ளையனின் வீரகாவியமாகும்; இந்த இத்தாலிய-ஜெர்மன்-பிரன்ச் டிவி தொடர் ஐரோப்பா முழுவதும் அதிக பார்வையாளர்களைக் கொண்டிருந்த தொடர் எனும் சாதனை படைத்தது.[சான்று தேவை]. நாட்டின் மிகப்பெரிய ஒளிபரப்பாளரான RAI டிவி இல் முக்கிய நேர இத்தாலிய தொலைக்காட்சித் தொடரான உன் மெடிக்கோ இன் பேமிக்லியாவில் கபீர் நடித்தார். இதில் இவரது மிகச்சிறந்த நடிப்பானது மிகவும் மாறுபட்ட இவரது நடிப்பின் வெளிப்படுத்தப்படாத பண்புகளை கொண்டிருந்தது. இதில் ஒரு பண்டைய குடும்பத்தலைவரான ஆபிரகாமாக இவரது இளவயது மற்றும் முதுமைக் காலத்தில் நடித்தார். 1995 ஆம் ஆண்டு டிவி தொடர் பைபில் கீ கஹானியன் என்ற வீரகாவியத்தில் நடித்தார். இத்தொடரானது தூர்தர்சன் இந்தியாவில் ஒளிபரப்பானது. பின்னர் தயாரிப்பாளர்களுக்கும் விளம்பர ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் இத்தொடர் நின்று போனது.
ஒரு ஆண்டிற்கும் மேலாக த போல்ட் அண்ட் த பியூட்டிபுலில் கபீர் நடித்தார். இந்தத் தொடர் 149 நாடுகளில் ஒரு பில்லியனுக்கும் மேலான மக்களால் பார்க்கப்பட்டு உலகின் அதிகமாகப் பார்க்கப்பட்ட இரண்டாவது தொலைக்காட்சி நிகழ்ச்சி என பெயர் பெற்றது.
விருதுகள் மற்றும் சாதனைகள்
ஆஸ்கார் விருதுகளை வழங்கும் பொறுப்பில் இருக்கும் கெளரவமிக்க அகாதமி ஆப் மோசன் பிச்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸின் வாக்காளர் உறுப்பினராக கபீர் இருக்கிறார். மேலும் இவர் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டின் வாக்காளர் உறுப்பினராகவும் உள்ளார்.
கபீர் பேடி ஐரோப்பா மற்றும் இந்தியா முழுவதும் ஏராளமான திரைப்படம், விளம்பரம் மற்றும் மக்களின் ஆதரவுடைய விருதுகளை வென்றுள்ளார்.