நசிருதீன் ஷா 1950ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி பிறந்த ஒரு தேசியத் திரைப்பட விருது வென்ற இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர். அவர், இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 2003வது வருடம், இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த சேவைகளுக்காக, இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கிக் கௌரவித்தது.
ஆரம்பகால வாழ்க்கை
நசிருதீன் ஷா இந்தியாவின் உத்திரப் பிரதேசம் என்னும் மாநிலத்தில் பராபங்கி என்னும் இடத்தில் பிறந்தார். அவர் பத்தொன்பதாவது நூற்றாண்டைச் சேர்ந்த ஆஃப்கன் மாவீரர் ஜன் ஃபிஷன் கான் என்பவரின் வம்சத்தில் வந்தவர்; மற்றும் எழுத்தாளர் இட்ரிஸ் ஷா, புகழ்பெற்ற பாகிஸ்தானிய நடிகர் சையத் கமல் ஷா, பாகிஸ்தான் உளவுத் துறையின் தலைமை இயக்குனர் ஷா மெஹபூப் ஆலம் மற்றும் மரப்பந்தாட்ட வீரர் ஓவைஸ் ஷா ஆகியோரின் உறவினரும் ஆவார். நசிருதீன் ஷான் தனது பள்ளிக் கல்வியை செயிண்ட் அன்ஸெல்ம்’ஸ் ஆஜ்மிர்]] பள்ளியிலும், பின்னர் நைனிடால், செயிண்ட் ஜோசஃப்’ஸ் கல்லூரியிலும் முடித்தார். 1971வது வருடம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலிருந்து கலைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றார்; பின்னர் தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார்.
அவர் வணிக ரீதியான பாலிவுட் திரைப்படம் மற்றும் இணைத் திரைப்படம் ஆகிய இரண்டிலுமே வெற்றி அடைந்துள்ளார். பல சர்வதேசத் திரைப்படங்களிலும், மிகவும் குறிப்பிட்டுக் கூறும் அளவில் சித்திரக் கதையின் ஹாலிவுட் தழுவலான தி லீக் ஆஃப் எக்ஸ்ட்ரார்டினரி ஜெண்டில்மென் என்னும் திரைப்படத்தில் காப்டன் நெமோ என்னும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரது மூத்த சகோதரர் லெஃப்டினட் ஜெனரல் ஜமீருதின் ஷா, பிஎஸ்விஎம், எஸ்எம், விஎஸ்எம்மும் நைனிடால் செயிண்ட் ஜோசஃப் பள்ளியின் முன்னாள் மாணவர்தான். இவர் 2008வது ஆண்டின் துவக்கத்தில் இந்திய ராணுவத்தில் ராணுவப் பணியாட்கள் (திட்டமிடுதல் மற்றும் அமைப்பு) துணைத் தலைவர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றார். இதற்கு முன்னர் அவர் திமாபுர் தளத்தின் 3 படைகளை வழி நடத்திச் சென்றுள்ளார். மேலும் 94வது வருடம் ஃபிப்ரவரி முதல் 97வது வருடம் ஏப்ரல் மாதம் வரை இவர் சௌதி அரேபியாவின் இந்திய பாதுகாப்புத் தூதுக் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.
தொழில் வாழ்க்கை
இந்திய இணைத் திரைப்படத்தின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவரான ஷா, நிஷாந்த், ஆக்ரோஷ், ஸ்பர்ஷ், மிர்ச் மசாலா, ஆல்பர்ட் பிண்டோ கோ குஸ்ஸா க்யோன் ஆத்தா ஹை, த்ரிகால், பவானி பவை, ஜுனூன், மண்டி, மோஹன் ஜோஷி ஹாஜிர் ஹோ, அர்த் சத்யா மற்றும் கதா போன்ற படங்களில் நடித்துள்ளார். .
1980வது வருடம் ஹம் பாஞ்ச் என்ற படத்தில் நடித்தது முதல் இவர் வணிக ரீதியிலான பாலிவுட் படங்களிலும் ஈடுபடலானார். இவரது வணிக ரீதியிலான திரைப்படங்களில், குறிப்பிடும்படியான அளவில் மிகுந்த வெற்றி அடைந்த அடுத்த படம், 1986வது ஆண்டில் பல நட்சத்திரங்கள் நடித்த கர்மா வாகும். இதில் இவர் முதுபெரும் நடிகர் திலீப் குமார் உடன் இணைந்து நடித்திருந்தார். தொடர்ந்து, இஜாதத் (1987), ஜல்வா (1988), மற்றும் ஹீரோ ஹீராலால் (1988) ஆகிய படங்களில் நடித்தார். 1988வது வருடம் தனது மனைவி ரத்னா பதக்கின் ஜோடியாக, ஹெச்.ஆர்.எஃப்.கீடிங்கின் புதினங்களில் தோன்றும் புனைத் துப்பறிவாளர் இன்ஸ்பெக்டர் கோடே என்னும் வேடத்தில், மெர்ச்சண்ட்-ஐவோரி தயாரிப்பில் தி பர்ஃபெக்ட் மர்டர் என்னும் ஆங்கில மொழிப் படத்தில் நடித்தார்.
பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த குலாமி (1985), திரிதேவ் (1989) விஷ்வாத்மா (1992) ஆகிய பல படங்களிலும் அவர் நடித்துள்ளார். 1994வது வருடம் மொஹரா என்னும் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தார். இது அவரது நூறாவது படமாகும். கலைப் படங்கள் மற்றும் வணிக ரீதியான படங்கள் ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடு, குறிப்பாக, கலைப்படங்களின் இயக்குனர்கள் வணிக ரீதியான படங்களைத் தயாரிக்கத் துவங்கியதும், பெரும்பாலும் குறைந்து விட்டதாக அவர் உறுதியாக நம்பினார். மகாத்மா காந்தியாக நடிக்க வேண்டும் என்ற அவரது கனவு 2000வது வருடம் கமல் ஹாசன் படமான, விமர்சன ரீதியில் மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்ற ஹே ராம் என்னும் திரைப்படத்தில் காந்தியாக நடித்தபோது மெய்ப்பட்டது. இந்தத் திரைப்படம் காந்தியின் கொலையை அவரைத் தாக்குபவரது பார்வையிலிருந்து கூறிய படமாகும்.
இதற்குப் பின்னர் அவர், 2001வது ஆண்டில் மான்சூன் வெட்டிங் மற்றும் 2003வது ஆண்டில் சித்திரக் கதையின் ஹாலிவுட் தழுவலான தி லீக் ஆஃப் எக்ஸ்ட்ரார்டினரி ஜெண்டில்மென் (இதில் அவருடன் ஷான் கானரி நடித்திருந்தார்) ஆகிய சர்வதேச திரைப்படங்களில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் அவர் கேப்டன் நெமோ என்னும் வேடம் ஏற்றிருந்தார். கேப்டன் நெமோவின் கதாபாத்திரத்தில் அவர் நடித்த பாணி, அவரது நெமோ அதை விட மிகக் குறைந்த அளவிலேயே பித்துக் கொண்டவராக இருந்த போதிலும், சித்திரப் புதினத்தில் சித்தரிக்கப்பட்டிருந்ததை மிகவும் ஒத்ததாக இருந்தது, 2004வது வருடம் ஷேக்ஸ்பியர் நாடகமான மேக்பெத் தின் இந்தியத் தழுவலான மக்பூல் என்று தலைப்பிடப்பட்ட திரைப்படத்தில் நடித்தார். இதன் பின்னர் தி கிரேட் நியூ வொண்டர்ஃபுல் என்னும் திரைப்படத்தில் நடிக்கலானார். அண்மையில் எ வென்ஸ்டே என்னும் திரைப்படத்தில் இவர் காணப்பட்டார்.
விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்று, மிகுந்த சர்ச்சைக்கும் உள்ளான சொஹைப் மன்சூர் படமான குதா கே லியே என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் பாகிஸ்தானியத் திரையுலகிலும் அறிமுகமானார். இதில், சிறியதாயினும் மிகவும் வலுவான ஒரு கதாபாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார். பொந்தன்மாடா என்ற மலையாளப் படத்திலும் மம்மூட்டியுடன் நடித்தார்.
இதர ஊடகங்களும் கலை வடிவங்களும்
1977வது வருடம் டாம் ஆல்டர் மற்றும் பெஞ்சமின் கிலானி ஆகியோருடன் இணைந்து மோட்லே புரொடக்ஷன்ஸ் என்னும் ஒரு நாடகக் குழுவை உருவாக்கினார். இவர்களது முதல் நாடகம் சாமுவேல் பெக்கெட்டின் புதினமான வெயிட்டிங் ஃபார் கோடோட். இது 1979வது வருடம் ஜூலை 29 அன்று பிருத்வி தியேட்டரில் அரங்கேற்றப்பட்டது.
1988வது வருடம் மிர்சா காலிப்பின் வாழ்க்கை மற்றும் அவர் வாழ்ந்த காலம் ஆகியவற்றை அடைப்படையாகக் கொண்ட, இனப்பெயர் சார்ந்த தொலைக் காட்சித் தொடர் ஒன்றில் நடித்தார். இது குல்ஜார் இயக்கத்தில் தேசிய தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது.
1989வது வருடம், ஜவஹர்லால் நேருவின் புத்தகமான தி டிஸ்கவரி ஆஃப் இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடத் தகுந்த திரைப்பட இயக்குனரான ஷியாம் பெனகல் இயக்கத்தில் உருவான மற்றொரு இனப் பெயர் சார்ந்த பாரத் ஏக் கோஜ் என்னும் தொலைக் காட்சித் தொடரில் மராட்டிய மன்னர் சிவாஜி யாக நடித்தார். இதில் ஔரங்கசீப் பின் வேடத்தை ஓம்புரி ஏற்றிருந்தார். இத்தொடரில் சிவாஜி யின் கதை இரண்டு நிகழ்வுகளாகத் தொடர்ந்து அளிக்கப்பட்டது.
1998வது வருடம் மஹாத்மா வர்சஸ் மஹாத்மா என்னும் நாடகத்தில் மகாத்மா காந்தியின் வேடத்தை ஏற்று நடித்தார். (இது மகாத்மா காந்தி மற்றும் அவரது முதல் மகன் ஹரிலால் காந்தி ஆகியோருக்கு இடையில் இருந்த உறவினை ஆய்வதாக அமைந்திருந்தது). ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் காந்தி திரைப்படத்தில் காந்தி வேடத்திற்காக அவர் ஒத்திகை பார்க்கப்பட்டிருந்தார்; இந்த நாடகத்தில் நடித்ததுடன், மகாத்மா காந்தி வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது இலக்கை அவர் நிறைவேற்றிக் கொண்டார். அதே சமயம், 2000வது வருடம் ஹே ராம் என்னும் படத்திலும் அவர் மீண்டும் மகாத்மாவின் வேடம் தாங்கி நடித்தார்.
சர்ஃபரோஷ் (1999) என்னும் திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டுப் பெற்றது. இதில் அவர் ஒரு கஜல் பாடகர் மற்றும் இந்தியாவில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஒரு பாகிஸ்தானிய உளவாளி என்று இரண்டு முகங்கள் கொண்ட ஒரு வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
விமர்சன ரீதியாக மிகுந்த பாராட்டுகளைப் பெற்ற இக்பால் என்னும் திரைப்படத்தில் மோஹித் என்னும் குடிகார விளையாட்டுப் பயிற்சியாளராக அவர் தமது நடிப்பிற்கு மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றார். இக்பால் படத்தின் கதாசிரியரான விபுல் கே ராவல், ஷாவை மனதில் கொண்டே இந்தக் கதாபாத்திரத்தை வடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரம் அவருக்குப் பரந்த அளவில் பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தது.
குழந்தைகளுக்கான கரடி கதைகள் என்னும் பிரபல ஒலிப் புத்தகத்தில் கதை சொல்லி என்னும் பாத்திரத்தில் நடித்த பல பிரபல நடிகர்களில் அவரே முதலாமவர். 2006வது வருட அகாடமி விருதுகளுக்காக இந்தியாவினால் பரிந்துரைக்கப்பட்ட பஹேலி என்னும் திரைப்படத்திலும் இவரே கதை சொல்லியாக வேடமேற்றிருந்தார்.
திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிக்கான ஆசிய அகாடமியின் சர்வதேச திரைப்பட மற்றும் தொலைக் காட்சிக் கழகம் என்னும் அமைப்பில் இவருக்கு வாழ்நாள் உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு இயக்குனராக
நசிருதீன் ஷா தமது நாடகக் குழுவுடன் புது டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் லாகூர் போன்ற இடங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நிகழ்தி வருகிறார். இஸ்மத் சௌக்டை மற்றும் சாதத் ஹஸன் மாண்டோ ஆகியோர் எழுதிய நாடகங்களை அவர் இயக்கியுள்ளார்.
ஒரு திரைப்பட இயக்குனராக அவர் அறிமுகமான யூன் ஹோத்தா ஹை தோ க்யா ஹோத்தா 2006வது வருடம் வெளிவந்தது. இந்தப் படத்தில் கொங்கனா சென் ஷர்மா, பரேஷ் ராவல், இர்ஃபான் கான் போன்று தங்களை நிலை நிறுத்திக் கொண்ட பல நட்சத்திரங்களுடன், புதுமுகம் ஆயேஷா டாக்கியா மற்றும் அவரது மகன் இமாத் ஷா ஆகியோரும் நடித்திருந்தனர்.
சொந்த வாழ்க்கை
அவர் பாலிவுட் நடிகை ரத்னா பதக் ஷாவை மணந்துள்ளார். இவர்களுக்கு ஹீபா என்னும் ஒரு மகளும், இமாத் மற்றும் விவான் என்று இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் ஜானே து… யா ஜானே நா, மிர்ச் மசாலா, தி பர்ஃபெக்ட் மர்டர் போன்ற படங்களில் உடன் நடித்துள்ளனர்.
இதற்கு முன்னர், நசிருதீன் ஷா சுரேகா சிக்ரியின் சகோதரியான, இரானில் மருத்துவராக இருந்தவரை மணம் புரிந்திருந்தார். அவரது பெயர் மனரா சிக்ரி (உறுதிப்படுத்தப்படவில்லை) என்பதாக இருக்கலாம்.
ஹீபா ஷா, திரு ஷாவின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகள். அவர் ரத்னா பதக் ஷாவின் மகள் அல்ல. ஹீபா ஷாவின் தாயார் இறந்ததற்குப் பிறகு, நசிருதீன் ஷா ரத்னா பதக்கை மணந்தார். ,
விருதுகள்
இந்திய சினிமாவிற்கு அளித்த பங்களிப்பிற்கான விருது.
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட வரலாறு
(உடன் நடித்த நட்சத்திரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்)
இணை-தயாரிப்பாளர்
குதா கே லியே (2007வது வருடத்திய ஒரு பாகிஸ்தானிய திரைப்படம்)