அருண்மொழி என்று அறியப்படும் நெப்போலியன், இந்திய திரைப்பட பாடகராவார். 1980களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பின்னணி இசைக்குழுவில் புல்லாங்குழல் வாசித்த இவரை சூரசம்ஹாரம் திரைப்படத்தில் நான் என்பது நீயல்லவோ தேவ தேவி எனும் பாடல் மூலமாக பாடகராக இளையராஜா அறிமுகப்படுத்தினார். இசையமைப்பாளர்கள் தேவா, சிற்பி, எஸ். ஏ. ராஜ்குமார், ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட பலர் இசையமைத்த திரைப்படங்களில் அருண்மொழி பாடியிருந்தாலும் இளையராஜா இசையமைத்த திரைப்படங்களில் பாடியதே அதிகம். அப்பாடல்கள், மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றன.
பாடிய சில பாடல்கள்
திரைப்படம் | பாடல் |
---|---|
பொண்டாட்டி தேவை | ஆராரோ பாட்டுப்பாட நானும் |
கவிதை பாடும் அலைகள் | உன்னை காணாமல் நான் ஏது |
பொங்கிவரும் காவேரி | வெள்ளி கொலுசுமணி |
தாலாட்டு பாடவா | வெண்ணிலவுக்கு வானத்த பிடிக்கலையா |
தாலாட்டு பாடவா | நீதானா நீதானா நெஞ்சே நீதானா |
தாலாட்டு பாடவா | ௭னது ராகம் மௌனராகம் |
தாலாட்டு பாடவா | வராது வந்த நாயகன் |
மல்லுவேட்டி மைனர் | மனசுக்குள்ள நாயனச் சத்தம் |
வானத்தைப் போல | ௭ங்கள் வீட்டில் ௭ல்லா நாளும் |
கும்மி பாட்டு | அடி ஆச மச்சான் |