ஏ. ஜி. ரத்னமாலா ஒரு இந்திய நாடக நடிகையும், திரைப்படப் பின்னணிப் பாடகியுமாவார். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 500 க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார்.
நாடக நடிகையாக
எம். ஜி. ஆரின் இன்பக் கனவு நாடகத்தில் எம். ஜி. ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார். என் தங்கை திரைப்படமாக வருமுன் நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது. நாடகத்தில் சிவாஜி கணேசன் பிரதான பாத்திரத்தில் நடித்து வந்தார். அவரின் தங்கையாக ரத்னமாலா நடித்தார். எம். ஜி. ஆர். நாடகக் குழுவில் நடிகையாக இருந்து வந்தார். பின்னர் சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்து வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் கட்டபொம்மன் மனைவி ஜக்கம்மாவாக நடித்தார். டி.ஆர். மகாலிங்கத்தின் “ஓர் இரவு” நாடகத்தில் மட்டுமல்லாது நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி போன்ற பழம்பெரும் நடிகர்களுடனும் ரத்னமாலா நாடகங்களில் நடித்திருக்கிறார்.
பின்னணிப்பாடகியாக
இசையமைப்பாளர்கள்
கே. வி. மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, எஸ். எம். சுப்பையா நாயுடு, சி. ஆர். சுப்புராமன், சி. என். பாண்டுரங்கன், எஸ். வி. வெங்கட்ராமன், ஆர். சுதர்சனம், டி. ஆர். பாப்பா, ஜி. கோவிந்தராஜுலு நாயுடு, டி. ஜி. லிங்கப்பா, எம். எஸ். விஸ்வநாதன், எஸ். தட்சிணாமூர்த்தி, கே. என். தண்டாயுதபாணி பிள்ளை, எஸ். ராஜேஸ்வரராவ், எஸ். அனுமந்தராவ், டி. ஆர். ராமநாதன், ஆர். கோவர்த்தனம், வேதா, ஹெச். ஆர். பத்மநாப சாஸ்திரி, பெண்டியாலா நாகேஸ்வரராவ், கண்டசாலா, எம். எஸ். ஞானமணி போன்ற பல இசையமைப்பாளர்கள் அமைத்த பாடல்களை இவர் பாடியுள்ளார்.
உடன் பாடிய பாடகர்கள்
இவர் தனியாகப் பல பாடல்கள் பாடியுள்ளார். அத்துடன் வேறு பாடகர்களுடன் இணையாகவும், குழுவாகவும் பல பாடல்கள் பாடியுள்ளார். முன்னணிப் பாடகர்களான டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், சி. எஸ். ஜெயராமன் ஆகியோருடனும் இசையமைப்பாளர்களான சி. ஆர். சுப்புராமன், ஜி. கே. வெங்கடேஷ் ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார். பல நகைச்சுவைப் பாடல்களை எஸ். சி. கிருஷ்ணன், ஜே. பி. சந்திரபாபு, ஏ. எல். ராகவன், ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார். மற்றும், திருச்சி லோகநாதன், கே. செல்லமுத்து, சி. எஸ். பாண்டியன், எஸ். வி. பொன்னுசாமி, வி. டி. ராஜகோபாலன், எம். சத்யம், பித்தாபுரம் நாகேஸ்வரராவ், கே. ஹெச். ரெட்டி போன்றோருடனும் பல பாடல்கள் பாடியுள்ளார். ஆண் பாடகர்கள் தவிர பெண் பாடகிகளோடும் சேர்ந்து பல பாடல்கள் பாடியுள்ளார். கே. ஜமுனாராணி, ஏ. பி. கோமளா, பி. லீலா, எம். எல். வசந்தகுமாரி, பி. பானுமதி, ஜிக்கி, எம். எஸ். ராஜேஸ்வரி, டி. வி. ரத்தினம், கே. ராணி, சூலமங்கலம் ராஜலட்சுமி, பி. ஏ. பெரியநாயகி, யு. ஆர். சந்திரா, உடுதா சரோஜினி, பத்மா போன்ற பாடகியருடன் இவர் சேர்ந்து பாடல்கள் பாடியுள்ளார்.
இறப்பு
ஏ. ஜி. ரத்னமாலா 2007 ஆம் ஆண்டு ஜூன் 3-ந் திகதி இதய நோய் காரணமாக தனது 76 ஆவது வயதில் சென்னை தியாகராய நகரிலிருந்த தமது வீட்டில் காலமானார்.
தமிழ்ப் பாடல்கள்
இப்பட்டியலில் ஏ. ஜி. ரத்னமாலா பாடிய சில பாடல்கள் ஆண்டுவாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆண்டு | திரைப்படம் | பாடல் |
---|---|---|
1950 | திகம்பர சாமியார் | காக்க வேண்டும் கடவுளே நீ |
1951 | ராஜாம்பாள் | ஒரு தினுசா |
1951 | தேவகி | ஹலோ மை டியர் ஹலோ |
டீ டீ சூடான டீ | ||
1952 | அந்தமான் கைதி | லவ் யூ…. ஆசையானேனே உன் மேலே |
என் தங்கை | குட் லக் குட்லக் | |
தர்ம தேவதை | அன்பாய் ஓடி வாடா ஆனந்த கிருஷ்ணா | |
1953 | ஜாதகம் | ஆண்டவன் நமக்கு |
ஜெனோவா | செய்யாமலே செய்வேன் என்று | |
ஆசை மகன் | அக்கம் பக்கம் | |
மருமகள் | ஆணுக்கொரு பெண்பிள்ளை | |
1954 | துளி விஷம் | மணமில்லா மலருக்கோர் மகிமையில்லை |
போன மச்சான் திரும்பி வந்தான் | பெண்ணை வீட்டில் பூட்டி | |
கொடுத்துடு நீயா கொடுத்துடு | ||
1955 | நல்ல தங்கை | மாப்பிள்ளை மக்கு மாப்பிள்ளை |
நல்ல தங்காள் | கோமள செழுந்தாமரை எழில் மேவிய | |
மங்கையர் திலகம் | புரிந்து கொள்ளவில்லை இன்னும் | |
மகேஸ்வரி | சொன்னா போதும் கண்ணாலே | |
ஜனக்கு ஜனக்கு ஜிஞ்ஜனக்கு | ||
முந்தி முந்தி விநாயகனே | ||
ஆகாய வீதியிலே அண்ணாந்து பாத்தபடி | ||
உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா | ||
குலேபகாவலி | பாராண்ட மன்னரெல்லாம்…. அச்சு நிமிர்ந்த வண்டி | |
காவேரி | காவேரித் தண்ணீர் பட்டால் கன்னியர் மேனி தங்கம் | |
டாக்டர் சாவித்திரி | மாயி மகமாயி…. ஆதி பரமேஸ்வரியே | |
1956 | தாய்க்குப்பின் தாரம் | விட்டதடி ஆசை |
கந்தா வரம் தந்தருள்வான் திருச்செந்தூரில் | ||
ரம்பையின் காதல் | காட்டுவெள்ளம் நீயே | |
போடு டக்கு முக்கு டக்கு தாளம் | ||
சதாரம் | எங்கும் ஒளி வீசுதே எனைத் தேடி | |
அன்னையே காளியம்மா ஈஸ்வரி | ||
கண்ணின் மணிகள் | எதுக்கும் ரெண்டு தேவை | |
நானே ராஜா | ஏலேலங்கடி | |
எல்லாம் இன்பமயம் | வண்டே நீ வா வா | |
1957 | மக்களைப்பெற்ற மகராசி | அடி தாராபுரம் தாம்புரம் |
ஓ மல்லியக்கா ஓ ரோஜாக்கா | ||
மணமகன் தேவை | போட்டானே ஒரு போடுதான் | |
புதுமைப் பித்தன் | ஐயா யாருக்கு வேணும் இந்த | |
மாமன்னர் அந்த | ||
கடன் வாங்கி கல்யாணம் | காசிக்குப் போனே ராமாஹரே | |
அக்கா மகளே….தூத்துக்குடி சாத்துக்குடி | ||
ஆரவல்லி | இது செங்கம்மா அது அங்கம்மா | |
கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா | ||
கற்புக்கரசி | நல்வாக்கு நீ கொடடி | |
எல்லை மீறுதே மனம் துள்ளி ஓடுதே | ||
மகாதேவி | உன் திருமுகத்தெ ஒருமுகமா திருப்பு | |
தந்தான தாளம் போடுவோம் | ||
ராணி லலிதாங்கி | ஆடுங்க பாடுங்க ஓடுறீங்க | |
பஜனைக்கு நாழிகை | ||
1958 | நீலமலைத் திருடன் | வெத்தல பாக்கு சுண்ணாம்பு |
ஒண்ணுக்கு ரெண்டாச்சு உபத்திரவத்துக்கு | ||
நீலாவுக்கு நெறஞ்ச மனசு | சைக்கிள் வருது சைக்கிள் வருது | |
சிங்கார சங்கீதமே | ||
காத்தவராயன் | கும்கார குப்பண்ணா | |
சங்கிலி ஜிங்கிலி…. வாராண்டி வாராண்டி குட்டிச்சாத்தான் | ||
வெற்றியே அருள் அம்மா | ||
அன்னையின் ஆணை | என்ன சாமி எதுக்கு சும்மா பாக்கிறே | |
பெற்ற மகனை விற்ற அன்னை | தில் ரப்சா பண்றாங்கோ | |
சாரங்கதாரா | எட்டி எட்டி பாக்குதடி தோப்பிலே | |
குடும்ப கௌரவம் | வெறும் வேஷம் | |
காத்திருக்கோம் | ||
சைனா யப்பான் ரங்கோன் | ||
மாங்கல்ய பாக்கியம் | அனுசூயா கதா காலட்சேபம் | |
பாடுபட்டாலே மச்சான் | ||
ஒன்றே மாந்தர் குலம் | ||
இமய மலையை இடது கையால் | ||
தங்கமலை ரகசியம் | காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா | |
வரவேணும் வரவேணும் | ||
பூலோக ரம்பை | வண்ண மயில் வேல் முருகன் | |
ஓம் என்ற பிரணவத்தின்…. கள்ளி மலை குறிஞ்சிநிலம் | ||
சம்பூர்ண ராமாயணம் | ஸ்ரீ ராமச்சந்திரன் மகுடாபிசேக திருக்கோலம் | |
மண்ணெல்லாம் பொன்னாகும் ராமன் வரவாலே | ||
திருமணம் | வை ராஜா வை | |
மாய மனிதன் | போக்குக் காட்டி போறவளே பொன்னம்மா | |
1959 | வண்ணக்கிளி | சாத்துகுடி சாறு தானா பாத்துக்குடி |
தங்கப்பதுமை | பூமாலை போட்டுப் போன மாமா | |
மனைவியே மனிதனின் மாணிக்கம் | காத்திருப்போம் கை பிடிப்போம் கண்ணே | |
வீரபாண்டிய கட்டபொம்மன் | ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி | |
போகாதே போகாதே என் கணவா | ||
எங்கள் குலதேவி | பாலும் பழமிருக்க பக்கத்தில நானிருக்க | |
மின்னல் வீரன் | வலையை வீசும் | |
சுமங்கலி | அக்கா மகளே சுட்டி பொண்ணே | |
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் | கோபிக்கிறாப்புல கோபிச்சுக்காதே கண்ணு | |
1960 | குறவஞ்சி | செங்கயல் வண்டு கலிங் கலிங் என்று |
1961 | திருடாதே | அச்சா பகுத் அச்சா |
அந்தி சாயும் நேரத்திலே | ||
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே | கோட்டும் சூட்டும் | |
மருத நாட்டு வீரன் | செய்ததொரு சந்தேகம் கேளு கண்மணி | |
குமார ராஜா | அங்காடிக்கடை வீதியிலே | |
1962 | இந்திரா என் செல்வம் | காதலுக்கு காலேஜு எங்கே இருக்கு |
1963 | கொஞ்சும் குமரி | தோப்புல ஒரு நாள் சிரித்தாயடி |
1963 | கலை அரசி | கெட்டாலும் கெட்டது இப்படிக் கெட்டிடக் கூடாது |
1963 | குபேரத் தீவு | கண்கண்ட செல்வம் இங்கே பாரு |
1964 | சித்ராங்கி | ஒய்யாரி பாமா உனக்காக வாம்மா |
உனக்கு ஒண்ணு எனக்கு ஒண்ணு இருக்குது மனசு |