திரைப்பட இயக்குனர் ப. நீலகண்டன் | Film Director P. Neelakantan

ப. நீலகண்டன் (2 அக்டோபர் 1916 – 3 செப்டம்பர் 1992) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். திரைப்படங்களுக்கு கதை, வசனங்களும் எழுதினார். இவர் 2 அக்டோபர் 1916 அன்று தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் பிறந்தார். 1947இல் இவருடைய நாம் இருவர் நாடகத்தினை அவிச்சி மெய்யப்பச் செட்டியார் திரைப்படமாக எடுத்தார். 1948இல் வேதாள உலகம் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். 1951இல் ஓர் இரவு திரைப்படத்தில் துணை இயக்குனராகப் பணியாற்றினார். இத்திரைப்படத்திற்கு வசனத்தினை கா. ந. அண்ணாதுரை எழுதினார்.


ஏஎல்எஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் அம்பிகாபதி (1957) மற்றும் திருடாதே (1961) ஆகிய இரு திரைப்படங்களை தயாரித்தார். மேலும் தமிழ், கன்னடத் திரைப்படங்கள் பலவற்றை இயக்கினார். அவற்றில் 1957 இல் சக்கரவர்த்தி திருமகள் தொடங்கி 1976இல் நீதிக்கு தலைவணங்கு முதல் எம்.ஜி.ஆரை வைத்து 17 திரைப்படங்களை இயக்கினார். இதனால் எம்.ஜி.ஆரின் ஆசுதான இயக்குனர் என்று புகழப்பட்டார்.


திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம்
1981 தெய்வத் திருமணங்கள்
1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
1976 நீதிக்கு தலைவணங்கு
1975 நினைத்ததை முடிப்பவன்
1974 நேற்று இன்று நாளை
1973 உலகம் சுற்றும் வாலிபன்
1972 ராமன் தேடிய சீதை
1972 சங்கே முழங்கு
1971 ஒரு தாய் மக்கள்
1971 நீரும் நெருப்பும்
1971 குமரி கோட்டம்
1970 என் அண்ணன்
1970 மாட்டுக்கார வேலன்
1968 கணவன்
1968 கண்ணன் என் காதலன்
1967 காவல்காரன்
1966 அவன் பித்தனா
1965 ஆனந்தி
1965 பூமாலை
1964 சுஜாக்கே ரகசே
1964 பூம்புகார்
1963 கொடுத்து வைத்தவள்
1963 ராஜ் மகால்
1962 எதையும் தாங்கும் இதயம்
1961 நல்லவன் வாழ்வான்
1961 திருடாதே
1960 ஆடவந்த தெய்வம்
1958 சுனிதா
1958 தேடி வந்த செல்வம்
1957 அம்பிகாபதி
1957 சக்கரவர்த்தி திருமகள்
1955 கோமதியின் காதலன்
1955 மொதல தேதி
1955 முதல் தேதி
1955 நம்பேக்கா
1954 கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி
1951 ஓர் இரவு
1949 வாழ்க்கை
1948 வேதாள உலகம்
1947 நாம் இருவர்

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் ப. நீலகண்டன் – விக்கிப்பீடியா

Film Director P. Neelakantan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *