சரவண சக்தி (Saravana Sakthi) என்பவர் ஒரு இந்திய நடிகரும், இயக்குநருமாவார். இவர் தமிழ் மொழிப் படங்களில் பணிபுரிகிறார். இவர் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொழில்
சரவண சக்தி எஸ். ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். “தண்டாயுதபணி” (2007), “நாயகன்” (2008) ஆகிய படங்களில் இயக்குநராக பணியாற்றினார். பின்னர் இவர் ஒரு நடிகரானார். “குட்டிப் புலி” (2013) திரைப்படத்தில் இவரது பாத்திரத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்றார். இது இவருக்கு பல படங்களின் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. “சூறக்காத்து” (2017) படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார். பின்னர் இவர் “பில்லா பாண்டி” (2019) படத்தின் வழியாக மீண்டும் இயக்குநர் பணிக்கு திரும்பினார்.
திரைப்படவியல்
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் சரவண சக்தி – விக்கிப்பீடியா