திரைப்பட இயக்குனர் பரதன் | Film Director Bharathan

பரதன்(Bharathan) (14 நவம்பர் 1946 – 30 ஜூலை 1998) இந்தியாவின் கேரளவில் பிறந்த இவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், கலைஞரும், கலை இயக்குனருமாவார். 1980 பத்மராஜன் மற்றும் கே. ஜி. ஜார்ஜ் ஆகியோருடன் இணைந்து மலையாளத் திரைப்படங்களுக்கான ஒரு புதிய பயிற்சிப் பள்ளியை நிறுவியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இது இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்கள் போன்ற பலராலும் பாராட்டப்பட்டு புதிய திரைப்படங்கள் உருவாக்கப்பட்டது. மேலும், 1990களில் இந்த பள்ளியில் சிபி மலையில், கமல், அ. க. லோகிததாசு மற்றும் ஜெயராஜ் ஆகியோரும் இதில் இணைந்தனர்.


ஆரம்ப கால வாழ்க்கை


திருச்சூர், நுண்கலைக் கல்லூரியில் தனது பட்டய சான்றினை முடித்த பின்னர், 1972இல் அ. வின்சென்ட் இயக்கிய “கந்தர்வசேத்திரம்” என்றப் படத்தின் மூலம் பரதன் ஒரு கலை இயக்குனராக திரைப்படங்களில் நுழைந்தார். புகழ்பெற்ற இயக்குனரான இவரது மாமா பி. என். மேனன், மூலம் ஈர்க்கப்பட்டார். அவருடைய சில திரைப்படங்களில் ஒரு கலை இயக்குனராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். 1975ஆம் ஆண்டு பத்மராஜனின் கதையை அடிப்படையாகக் கொண்ட “பிரயாணம்” என்றப் படத்தில் அறிமுகமானார்.


பாணி மற்றும் கருப்பொருள்கள்


கேரளாவில் கிராமப்புற வாழ்க்கையின் உண்மையான யதார்த்தத்தை இவரது படங்கள் நன்கு பிரதிபலித்தது. இந்திய திரைப்படத்தில் பிரபலமாக இருந்த நட்சத்திர ஆதிக்கக் கலாச்சாரத்தை, இவர் தனது தொழிலின் மூலம் முழுவதுமாகத் தகர்த்தெறிந்தார். இவரது பிற திரைப்படங்களில் முக்கிய திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஆனால் வழக்கமாக கதை அல்லது கதை சொல்லும் பாணிகளில் இவர் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை. இவரது ஆரம்பகால படங்களில் பலவும் பாலியல் கருப்பொருள்களின் தைரியமான சித்தரிப்புக்காக அறியப்பட்டன. இவருடைய படங்களில் பெரும்பாலும் ஆண்-பெண் உறவு நெறிகள் மற்றும் சமூக மரபுகளை உடைத்தெறிந்தே காணப்படும். இவரது கடைசி சில திரைப்படங்களான மஞ்ஜீரத்வணி, தேவராகம் மற்றும் சூரம் போன்றவை விமர்சகர்களால் மிதமான விமர்சனங்களைப் பெற்றது.


திரைப்பட வாழ்க்கை


மலையாளத்திலும் தமிழ் மொழியிலும் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 1975 ஆம் ஆண்டில் “பிரயாணத்து”டன் தனது வாழ்க்கையைத் துவங்கினார். இவரது படங்களில் மறக்கமுடியாத சில தேவர் மகன், இரதிநிர்வேதம், சாமரம், பாலங்கள், அமரம், வைசாலி போன்றவை அடங்கும்.


பிற்கால வாழ்வு


1998 ஆம் ஆண்டு சூலை 30 ஆம் தேதி சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது 52 வயதில் பரதன் இறந்தார். இவரது உடல் அவரது சொந்த ஊரான வடக்காஞ்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இவரது வீட்டின் அருகில் தகனம் செய்யப்பட்டது. இவரது கடைசி படம் சுரம் இவரது மரணத்திற்கு ஒரு வருடம் முன்பு வெளியிடப்பட்டது.


சொந்த வாழ்க்கை


பரதன், திரைப்பட நடிகையும் நாடக நடிகையுமான கே. பி. ஏ. சி. இலலிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் திருமணத்திற்கு முன்னும் பின்னும் பல படங்களில் இவர் பணி புரிந்துள்ளார். ரதிநிர்வேதம் (1978) படப்பிடிப்பில் இவர் இலலிதாவை திருமணம் செய்து கொள்ள எண்ணினார். இந்த படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகு இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். கேரள கட்டிடக்கலை அடிப்படையிலான ஒரு அற்புதமான கலையமைப்புடன் கூடிய ஒரு வீட்டினை சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் கட்டினார். இவது மகன் சித்தார்த் பரதன் ஒரு நடிகராகவும், பாடலாசிரியரியராகவும், இயக்குநராகவும் உள்ளார். நம்மாள் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான சித்தார்த், 1981இல் வெளிவந்த பரதனின் நித்ரா என்ற திரைப்படத்தை 2012இல் மறுபடியும் படமாக்கினார். இயக்குனராக அறிமுகமாவதற்கு முன்னர் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் சில படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

வெளி இணைப்புகள்

மலையாளம் திரைப்பட இயக்குனர் பரதன் – விக்கிப்பீடியா

Malayalam Film Director Bharathan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *