மதுமித்ரா என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குனராவார்.
இவர் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையில் பிறந்தவர். இந்தோனேசியாவில் வளர்ந்தார். பிறகு சிங்கப்பூரில் கல்லூரியில் படித்தார், மேல்படிப்பினை அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் படித்தார்.
சிங்கப்பூரில் இருந்த காலத்தில் நிறைய குறும்படங்களை தயாரித்தார். இவருக்கு பிபிசி சிங்கப்பூர் மாணவர் விருதை அளித்தது. அமெரிக்காவில் கரீபியக் கடற்கொள்ளையர்கள் பற்றிய ஆவனப்படமெடுத்தார்.
நடிகர் ஆர். பார்த்தீபன், சாயா சிங் நடிப்பில் வல்லமை தாராயோ என்ற திரைப்படத்தினை முதன்முதலாக எடுத்தார்.
திரைப்படங்கள்
2008 | வல்லமை தாராயோ |
---|---|
2010 | கொல கொலயா முந்திரிக்கா |
2015 | மூனே மூனு வார்த்தை |
2015 | மூடு முக்கல்லோ செப்பாலண்டே |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் மதுமித்ரா – விக்கிப்பீடியா