மகேந்திரன் (சூலை 25, 1939 — ஏப்ரல் 2, 2019) புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ. அலெக்சாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.
மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற குறும்புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ்த் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாக வைத்துப் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தைத் திரைப்படமாக்கத் திரைக்கதை, உரையாடல் போன்றவற்றை எழுதி வைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனைத் திரைப்படமாக்க முடியாமல் போனது.
திரைப் படைப்புகள்
1978: முள்ளும் மலரும்
1979: உதிரிப்பூக்கள்
1980: பூட்டாத பூட்டுகள்
1980: ஜானி
1980: நெஞ்சத்தை கிள்ளாதே
1981: நண்டு
1982: மெட்டி
1982: அழகிய கண்ணே
1984: கை கொடுக்கும் கை
1986: கண்ணுக்கு மை எழுது
1992: ஊர்ப் பஞ்சாயத்து
2006: சாசனம்
இதர படைப்புகள்
அர்த்தம் (தொலைக்காட்சி நாடகம்)
காட்டுப்பூக்கள் (தொலைக்காட்சி நாடகம்
கதை/வசனம்/திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
தங்கப்பதக்கம் – கதைவசனம்
நாம் மூவர் – கதை
சபாஷ் தம்பி – கதை
பணக்காரப் பிள்ளை – கதை
நிறைகுடம் – கதை
திருடி – கதை
மோகம் முப்பது வருஷம் – திரைக்கதை வசனம்
ஆடு புலி ஆட்டம் – கதை வசனம்
வாழ்ந்து காட்டுகிறேன் – கதை வசனம்
வாழ்வு என் பக்கம் – கதை வசனம்
ரிஷிமூலம் – கதை வசனம்
தையல்காரன் – கதை வசனம்
காளி – கதை வசனம்
பருவமழை -வசனம்
பகலில் ஒரு இரவு -வசனம்
அவளுக்கு ஆயிரம் கண்கள் – கதை வசனம்
கள்ளழகர் -வசனம்
சக்கரவர்த்தி – கதை வசனம்
கங்கா – கதை
ஹிட்லர் உமாநாத் – கதை
நாங்கள் – திரைக்கதை வசனம்
challenge ramudu (தெலுங்கு) – கதை
தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) -கதை
சொந்தமடி நீ எனக்கு -கதை வசனம்
அழகிய பூவே – திரைக்கதை வசனம்
நம்பிக்கை நட்சத்திரம் -கதை வசனம்
திரைப்பட பட்டியல்
1966 |
நாம் மூவர் |
1967 |
சபாஷ் தம்பி |
1968 |
பணக்கார பிள்ளை |
1969 |
நிறைகுடம் |
1972 |
கங்கா |
1974 |
திருடி |
1974 |
தங்கபதக்கம் |
1975 |
தொட்டதெல்லாம் பொன்னாகும் |
1975 |
நம்பிக்கை நட்சத்திரம் |
1975 |
வாழ்ந்து காட்டுகிறேன் |
1975 |
அவளுக்கு ஆயிரம் கண்கள் |
1976 |
வாழ்வு ௭ன் பக்கம் |
1976 |
மோகம் முப்பது வருஷம் |
1977 |
சொந்தமடி நீ ௭னக்கு |
1977 |
சக்கரவர்த்தி |
1977 |
சொன்னதை செய்வேன் |
1977 |
ஆடுபுலி ஆட்டம் |
1978 |
முள்ளும் மலரும் |
1978 |
பகலில் ஒரு இரவு |
1979 |
உதிரிப்பூக்கள் |
1980 |
சேலன்ஜ் ராமடு |
1980 |
ரிஷிமூலம் |
1980 |
பூட்டாத பூட்டுகள் |
1980 |
காளி |
1980 |
ஜானி |
1980 |
நெஞ்சத்தை கிள்ளாதே |
1981 |
நண்டு |
1982 |
கிட்லர் உமாநாத் |
1982 |
மெட்டி |
1982 |
அழகிய கண்ணே |
1984 |
கை கொடுக்கும் கை |
1986 |
கண்ணுக்கு மை ௭ழுது |
1991 |
தையல்காரன் |
1992 |
நாங்கள் |
1992 |
ஊர் பஞ்சாயத்து |
1999 |
கள்ளழகர் |
2004 |
காமராஜ் |
2006 |
சாசனம் |
2016 |
தெறி |
2017 |
Katamarayudu |
2018 |
நிமிர் |
2018 |
மிஸ்டர் சந்திரமௌலி |
2018 |
சீதக்காதி |
2019 |
பேட்ட |
2019 |
Boomerang |
சுவையான தகவல்கள்
திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்குக் கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார்.
இனமுழக்கம், துக்ளக் போன்ற இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
மகேந்திரன் சினிமாவும் நானும் என்னும் நூலினை எழுதியுள்ளார். இது 2004ஆம் ஆண்டு வெளியானது.
திரையுலகில் ஒரு இடம் பெற முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். தமக்கு மாதச் சம்பளம் அளித்துக் கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்குத் திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதைத் தாம் பூர்த்தி செய்யவில்லை எனினும், எம்.ஜி.ஆர். அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். எனினும், எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திற்கும் இவர் உரையாடலோ திரைக்கதையோ எழுதியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகியோரின் வெற்றிப் படங்களுக்கு உரையாடல் எழுதியுள்ளார். ரஜினியை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். இவரது படங்களில் அதிகம் நடித்த நட்சத்திரம் அவரே.
மகேந்திரனின் முதல் படம் துவங்கி, அவரது பல படங்களில் சரத்பாபு இடம் பெற்றார்.
கன்னட நடிகை அஸ்வினியைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் மகேந்திரன். படம்: உதிரிப் பூக்கள். பேபி அஞ்சுவும் மகேந்திரனின் அறிமுகமே.
கமலஹாசனின் தமையன் சாருஹாசனைத் திரையுலகுக்கு உதிரிப் பூக்கள் படத்தின் வாயிலாக அறிமுகம் செய்தவர் மகேந்திரன். மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய சாருஹாசன், பின்னர் ஒரு கன்னடப் படத்திற்காக மிகச் சிறந்த நடிகருக்கான அனைத்திந்திய விருதினைப் பெற்றார்.
விஜயனை அறிமுகம் செய்தது இயக்குநர் பாரதிராஜா எனினும், அவருக்கு மறக்க இயலாத ஒரு வேடத்தை உதிரிப் பூக்களில் அளித்து, திரையுலகில் அவரைக் கதாநாயகனாக உயர்த்தியவர் மகேந்திரன். இதைத் தொடர்ந்து, பல படங்களில் விஜயன் கதாநாயகனாக நடித்தார்.
மகேந்திரனின் மிகச் சிறப்பான அறிமுகம் சுஹாசினி. நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் நடிப்பாற்றலுக்காக எதிர்பார்க்கப்பட்ட தேசிய விருதை சுஹாசினி இழந்தார். (பின்னர் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிந்து பைரவி திரைப்படத்திற்காக இவ்விருதினை அவர் பெற்றார்.)
முள்ளும் மலரும் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும், அதில் ஒளிப்பதிவாளராக பாலு மகேந்திரா பணி புரிய மிகவும் உதவியவர் கமலஹாசன் என்றும் மகேந்திரன் குறிப்பிட்டதுண்டு. ஆயினும், மகேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்ததில்லை.
இவர் தெறி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் மகேந்திரன் – விக்கிப்பீடியா
Film Director Mahendran – Wikipedia