நாயன்மார் | Nayanmars

நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் – இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.

நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர்.

நூல்கள்

திருத்தொண்டதொகை

பெரியபுராணம்

இவர்களின் வரலாறு சேக்கிழாரால், பெரியபுராணம் என்ற பெயரில் எழுதப்பட்டது.

நாயன்மாரின் பட்டியல்

நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.

எண்பெயர்குலம்
1அதிபத்தர்பரதவர்
2அப்பூதியடிகள்அந்தணர்
3அமர்நீதி நாயனார்வணிகர்
4அரிவட்டாயர்வேளாளர்
5ஆனாய நாயனார்இடையர்
6இசைஞானியார்ஆதி சைவர்
7இடங்கழி நாயனார்வேளிர்[4]
8இயற்பகை நாயனார்வணிகர்
9இளையான்குடிமாறார்வேளாளர்
10உருத்திர பசுபதி நாயனார்அந்தணர்
11எறிபத்த நாயனார்மரபறியார்
12ஏயர்கோன் கலிகாமர்வேளாளர்
13ஏனாதி நாதர்ஈழக்குலச்சான்றார்
14ஐயடிகள் காடவர்கோன்காடவர்,பல்லவர்
15கணநாதர்அந்தணர்
16கணம்புல்லர்செங்குந்தர் [5][6]
17கண்ணப்பர்வேட்டுவர்
18கலிய நாயனார்செக்கார்
19கழறிற்றறிவார்சேரர்-அரசன்
20கழற்சிங்கர்பல்லவர்-அரசன்
21காரி நாயனார்அந்தணர்
22காரைக்கால் அம்மையார்வணிகர்
23குங்கிலியகலையனார்அந்தணர்
24குலச்சிறையார்மரபறியார்
25கூற்றுவர்களப்பாளர்
26கலிக்கம்ப நாயனார்வணிகர்
27கோச்செங்கட் சோழன்சோழர்-அரசன்
28கோட்புலி நாயனார்வேளாளர்
29சடைய நாயனார்ஆதி சைவர்
30சண்டேசுவர நாயனார்அந்தணர்
31சக்தி நாயனார்வேளாளர்
32சாக்கியர்வேளாளர்
33சிறப்புலி நாயனார்அந்தணர்
34சிறுதொண்டர்மாமாத்திரர்
35சுந்தரமூர்த்தி நாயனார்ஆதி சைவர்
36செருத்துணை நாயனார்வேளாளர்
37சோமசிமாறர்அந்தணர்
38தண்டியடிகள்செங்குந்தர் [7][8]
39திருக்குறிப்புத் தொண்டர்வண்ணார்
40திருஞானசம்பந்தமூர்த்திஅந்தணர்
41திருநாவுக்கரசர்வேளாளர்
42திருநாளை போவார்புலையர்
43திருநீலகண்டர்குயவர்
44திருநீலகண்ட யாழ்ப்பாணர்பாணர்
45திருநீலநக்க நாயனார்அந்தணர்
46திருமூலர்இடையர்
47நமிநந்தியடிகள்அந்தணர்
48நரசிங்க முனையர்முனையரையர்
49நின்றசீர் நெடுமாறன்பாண்டியர் அரசர்
50நேச நாயனார்சாலியர்
51புகழ்சோழன்சோழர்- அரசர்
52புகழ்த்துணை நாயனார்ஆதி சைவர்
53பூசலார்அந்தணர்
54பெருமிழலைக் குறும்பர்குறும்பர்
55மங்கையர்க்கரசியார்பாண்டியர்-அரசர்
56மானக்கஞ்சாற நாயனார்வேளாளர்
57முருக நாயனார்அந்தணர்
58முனையடுவார் நாயனார்வேளாளர்
59மூர்க்க நாயனார்வேளாளர்
60மூர்த்தி நாயனார்வணிகர்
61மெய்ப்பொருள் நாயனார்வேளாளர்
62வாயிலார் நாயனார்வேளாளர்
63விறன்மிண்ட நாயனார்வேளாளர்

வகைப்பாடு

காலம், குலம், நாடு, இயற்பெயர் – காரணப்பெயர் என பல வகைகளில் நாயன்மார்களை வகைப்படுத்துகிறார்கள். இவ்வாறான ஒப்புமை நோக்குமை நாயன்மார்களைப் பற்றிய புரிதல்களை அதிகப்படுத்த உதவுகின்றன. நாயன்மார்களின் வரலாறுகளை ஆய்வு செய்யவும், அவற்றில் உள்ள சேர்க்கைகளையும், உண்மைகளையும் புரிந்து நோக்கவும் இவ்வாறான வகைப்பாடு உதவுகின்றன.

சமயக் குரவர்கள்

நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.

பாலினம்

அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.

மரபு

நாயன்மார்களை மரபு அடிப்படையில் நோக்கும் போது, அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், ஆதி சைவர், மரபுக்கொருவர், மரபு கூறப்படாதவர் என வகைப்படுத்துகின்றனர்.

அரசர்

  • அரச மரபினர் – 12 பேர்
  • சேரர் – சேரமான் பெருமான்
  • சோழர் – கோச்செங்கட் சோழர், புகழ்ச் சோழர்
  • பாண்டியர் – நெடுமாறர், மங்கையர்க்கரசியார்
  • பல்லவர் – கழற்சிங்கர், ஐயடிகள் காடவர் கோன்
  • களப்பாளர் – கூற்றுவ நாயனார்
  • சிற்றரசர் – மெய்பொருள் நாயனார் , நரசிங்க முனையரையர், பெருமிழலைக் குறும்பர், இடங்கழி நாயனார்

சிற்றசர்கள்

  • மெய்பொருள் நாயனார் – திருக்கோவலூர் (நடுநாடு)
  • நரசிங்க முனையரையர் – திருநாவலூர் (நடுநாடு)
  • பெருமிழலைக் குறும்பர் – பெருமிழலை (சோழநாடு)
  • இடங்கழி நாயனார் – கொடும்பாளூர் (கோனாடு)

நாடு

நாடுகளில் அடிப்படையில் நாயன்மார்களை நோக்கும் போது பெருவாரியான அடியார்கள் சோழ நாட்டினை சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சேர, பாண்டிய நாடுகளோடு, மலைநாடு, தொண்டைநாடு, நடுநாடு, வடநாடு ஆகிய நாடுகளில் உள்ளோரும் நாயன்மார்களாக இருந்துள்ளார்கள். சோழ நாட்டிற்கு அடுத்தபடியாக தொண்டை நாட்டில் எட்டு நாயன்மார்கள் உள்ளார்கள்.

  • சேர நாடு – 2 நாயன்மார்
  • சோழ நாடு – 37 நாயன்மார்
  • தொண்டை நாடு – 8 நாயன்மார்
  • நடு நாடு – 7 நாயன்மார்
  • பாண்டிய நாடு – 5 நாயன்மார்
  • மலை நாடு – 2 நாயன்மார்
  • வட நாடு – 2 நாயன்மார்

முக்தி தலங்கள்

முக்தி

நாயன்மார்கள் செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான முறையில் முக்தி அடைந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் குருவருளால் முக்தி பெற்றவர்கள் பதினொரு நாயன்மார்கள், சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்து ஒரு நாயன்மார்கள், அடியாரை வழிபட்டமையால் முக்தி பெற்றவர்கள் இருபத்து ஒரு நாயன்மார்கள்.

குருவருளால் முக்தியடைந்தவர்கள்

  1. திருஞானசம்பந்தர்
  2. திருநாவுக்கரசர்
  3. திருமூலர்
  4. நின்றசீர் நெடுமாறர்
  5. மங்கையற்கரசியார்
  6. குலச்சிறையார்
  7. திருநீலகண்டயாழ்ப்பாணர்
  8. பெருமிழலைக்குறும்பர்
  9. கணம்புல்லர்
  10. அப்பூதியடிகள்
  11. சோமாசிமாறர்

கோயில்கள்

அவதாரத் தலங்கள்

நாயன்மார்கள் பிறந்த தலங்களை நாயன்மார் அவதாரத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஐம்பத்தி எட்டு (58) தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. மற்றவை பாண்டிச்சேரி (காரைக்கால்), ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற வீதத்திலும், கேரளா மாநிலத்தில் இரண்டு இடங்களிலும் அமைந்துள்ளன.

நாயன்மார் தலங்கள்

நாயன்மார்களுக்கு தனிக்கோயில்கள் அரசர்கள் காலத்தில் எடுக்கப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை இருபத்து ஒன்பதாகும்.

நாயன்மாரும் அவர்கள் பாடிய பாடல் தொகுதிகளும்

மாணிக்கவாசகர்திருவாசகம்

வெளி இணைப்புகள்

நாயன்மார் | Nayanmars – Wikipedia

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *