செம்மயிற்கொன்றை மரம்

செம்மயிர்க்கொன்றை (Delonix regia) வெப்பவலயப் பகுதிகளைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது, மயிர்க்கொன்றை, மயிற்கொன்றை, மேமாதப்பூ மரம் எனப் பல பெயர்களிலும் அழைக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்காவில் இம் மரத்தை அறிமுகப்படுத்திய பிலிப்பே டி லாங்வில்லியேர்ஸ் டி பொயின்சி (Phillippe de Longvilliers de Poincy) என்பவரின் பெயரில் இதனை ஆங்கிலத்தில் ரோயல் பொயின்சியானா என அழைப்பதுண்டு.

இதன் கடும் பச்சை நிற இலைகளும் அவற்றின் பின்னணியில் கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கி ஒளிரும் செம்மஞ்சள் நிறப் பூக்களும் இம் மரத்துக்கு மிகுந்த கவர்ச்சியை வழங்குகின்றன. இதனால் இம்மரம் உலகின் அழகிய மரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

செம்மயிற்கொன்றை மரம், மடகாஸ்கர் தீவைத் தாயகமாகக் கொண்டது. இங்கே இது மேற்கு மலகாசிக் காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றது. காட்டுப் பகுதிகளைப் பொறுத்தவரை இது அழியும் ஆபத்து கொண்ட மரமாகக் கருதப்பட்டாலும், பிற பகுதிகளில் இது பெருமளவில் அலங்காரத் தாவரமாக வளர்க்கப்படுகின்றது. இதன் அழகியற் பெறுமானத்தையும் விட இது பயனுள்ள ஒரு நிழல் மரமும் ஆகும். இது ஏறத்தாழ 5 மீட்டர் உயரமே வளர்வதும், அடர்ந்த இலைகளைக் கொண்ட மேற்பகுதி குடை போல் பரந்து காணப்படுவதும் இதற்குக் காரணமாகும். இம்மரம், தெளிவான வறண்ட பருவ காலத்தைக் கொண்ட பகுதிகளில் வறட்சியின் போது இலைகளை உதிர்த்துவிடினும், ஏனைய இடங்களில் இது நிலைத்த பசுமையான மரமாகவே உள்ளது.

வெளி இணைப்புகள்

செம்மயிற்கொன்றை மரம் – விக்கிப்பீடியா

Delonix regia – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *