சங்ககாலத்தில் குறிஞ்சிநிலத்தில் வளர்ந்த மரங்களில் ஒன்று செயலை மரம். இது செந்நிறத் தளிர்களைக் கொண்டது. ஆண்கள் இதன் தளிர்களைத் தலையிலும், காதுகளிலும் அணிந்துகொண்டனர். மார்பில் மாலையாகக் கட்டிப் போட்டுக்கொண்டனர். மகளிர் தழையாடை பின்னி இடையில் அணிந்துகொண்டனர். செயலை மரங்களில் ஊசல் கட்டி ஆடினர். பூவாகப் பறித்துக் குவித்து விளையாடினர். காமன் கணையாகப் பயன்படுத்தும் ஐந்து மலர்களில் ஒன்று இந்தச் செயலை. இந்தச் செய்திகளைச் சங்கப்பாடல்கள் நெரிவிக்கின்றன.
About the author
Related Posts
July 12, 2021
ஜவ்வரிசி மரம்
September 27, 2021
பார்மோசன் திட்டுச் சிறுத்தை
October 5, 2021