மாவிலங்கம், கூவிரம், மாவிலிங்கு அல்லது குமரகம் (Crateva religiosa) என்பது ஒருவகை மரமாகும். இது மூன்று விரல் போன்ற கூட்டிலைகளையும் மலர்ந்ததும் மஞ்சளாகும், வெண்ணிற மலர்களையும் செந்நிற உருண்டையான சதைக்கனிகளையும் உடைய வெண்ணிற மரம். இதன் இலை, வேர், பட்டை மருத்துவ பயன் உடையது.திருச்சேறை (உடையார்கோயில்), திருநாட்டியத்தான்குடி முதலிய தலங்களில் தலமரமாக விளங்குவது மாவிலங்க மரமாகும்.