வெள்வேல் மரம்

வெள்வேல் (Vachellia leucophloea) என்பது ஒருவகை மரமாகும். இம்மரம் இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளை உடைய கரிய முள்ளுள்ள பெருமரம். மரத்தின் புறப்பரப்பு வெண்ணிறமாகவும், உட்புறம் மஞ்சளாகவும் இருக்கும். மலர்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. காய்கள் தட்டையானவை. காடுகளிலும், தரிசுநிலங்களிலும் தமிழகத்தில் எங்கும் தானே வளர்கிறது. இதன் இலை, பட்டை, வேர், பிசின் விதை ஆகியவை மருத்துவப்பயன் உள்ளவை. திருவேற்காடு என்னும் தலத்தில் தல விருட்சமாக விளங்குவது வெள்வேல் மரமாகும். தலத்தின் பெயர் வேல்காடு என மரத்தின் பெயராலேயே அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்

வெள்வேல் மரம் – விக்கிப்பீடியா

Vachellia leucophloea – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *