ஞமலி நாய்

ஞமலி என்பது நாயின் இனங்களில் ஒன்று. இது வேட்டையாடவும், இரவில் வீட்டுக்குக் காவலாகவும் பயன்பட்டது. இதனைப் பற்றியும் இதன் பயன் பற்றியும் சங்கப்பாடல்கள் பல சுவையான செய்திகளைக் குறிப்பிடுகின்றன.


  • ஞமலியை ஞாளி என்றும் வழங்குவர். இது புதியவர் வந்தால் குரைத்து வீட்டுக்காரர்களுக்குக் காட்டிக்கொடுத்துவிடும்.

  • தெருவில் உப்பு விற்றுக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து ஞமலி குரைத்தது. அதனைக் கண்டு அவள் வெருவினாள்.

  • முயல் வேட்டைக்கும் ஞமலி உதவும்.

  • ஞமலி மனவு என்னும் முள்ளம்பன்றியைக் கூட வேட்டையாடும்.

  • வேட்டைக்குச் செல்பவர் பல ஞமலிகளுடன் செல்வர். அவற்றைக் கண்டால் மகளிர் அஞ்சுவர்.

  • நான் எய்த அம்புக் காயத்துடன் ஆண்யானை ஒன்று இவ் வழியே வந்ததா என்று தலைவியை வினவிக்கொண்டே வந்த தலைவனோடு சினம் கொண்ட ஞமலி ஒன்றும் வந்தது.

  • வேட்டுவன் அம்பு எய்வதற்கு ஏதுவாக அமையும்படி ஞமலி ஆண்முள்ளம்பன்றியை வளைத்துத் துரத்தியது.

  • பொழுது போய் இருட்டும் வரையில் கடமானை வளைத்து வளைத்துத் துரத்திய ஞமலி கூட இளைப்பு வாங்குகின்றன.

  • கூத்தருடன் சேர்ந்து மலையேறும் விறலியரின் காலடிகள் மதம் பிடிக்காத ஞமலி நாக்கினைப் போலச் சிவந்து கசிவதை வெளிக்காட்டிக்கொண்டனர்.

  • ஞமலியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைப்பர்.

  • காவிரிப்பூம்பட்டினத்தின் கீழைக் கடற்கரைத் துறைமுகப் பகுதியில் ஞமலி என்னும் நாய் இனம் தகர் ஆடுகளோடு சுழன்று இணக்கமாக விளையாடியது.

  • வெளி இணைப்புகள்

    ஞமலி – விக்கிப்பீடியா

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *