வெண்தலை சிலம்பன், (தென்னிலங்கையில்) குந்துகாலி, தவிட்டுக் குருவி, கரியில்லாக்கிளி (மலையாளத்தில்), புலுணி என்று பலவாறு அழைக்கப்படும் பன்றிக்குருவி தென்னிந்தியா (பெல்காம், ஐதராபாத், தெற்குக் கோதாவரி பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளை வட எல்லையாகக் கொண்டது) , இலங்கைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் குருவி (இலங்கையில் இதனை புலுனி என்றும் அழைப்பர்) – பெரும்பான்மையான சிலம்பன்களைப் போலவே இக்குருவியும் குடிபெயர்வதில்லை. உருவத்திலும் செயலிலும் கள்ளிக்குருவியை ஒத்து இருப்பதால் இதை எளிதில் தவறாக கள்ளிக்குருவி என்றெண்ணக் கூடும். ஆனால், பன்றிக்குருவியின் தலை வெளிர் நிறங்கொண்டு இருக்கும்; மார்பும் தொண்டையும் சற்று கருந்தோற்றத்துடன் விளங்கும்.
About the author
Related Posts
September 28, 2021
முனை முயல்
September 21, 2021
ஓரினோக்கோ முதலை
September 23, 2021